தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட குலசேகரன்பட்டினத்தில் இவ்வாண்டு அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா கடந்த (23.09.2025) அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி (02.10.2025) அன்று சூரசம்காரம் மற்றும் (03.10.2025) அன்று காப்பு தரித்தல் நிகழ்வுடன் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்த தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் திருவிழாவை அமைதியாக நடத்தியதற்காக சுமார் 4,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேற்படி தசரா திருவிழாவில் சிறப்பாக பணிபுரிந்தமைகக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் இன்று (13.10.2025) தனிப்பிரிவு காவல்துறையினர், தொழில்நுட்ப பிரிவு, சைபர் குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு ஆகிய காவல்துறையினரை வாழ்த்தி பாராட்டினார்.