திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N.சிலம்பரசன், இ.கா.ப., வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சாலை விபத்துகளை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாவட்ட காவல் துறையினர் தொடா்ந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மாவட்ட காவல்துறையினர் இரவு பகல் பாராமல் வாகன தணிக்கை மேற்கொண்டு அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், வாகனங்களை ஒட்டி செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
தினமும் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து வாகன ஓட்டிகளிடம் நேரடியாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் காவல்துறையினர் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து விபத்துகள் ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பதாகை, எச்சரிக்கை விளக்குகள், தேவையான இடங்களில் வேகத்தடை, ஒளிரும் பட்டைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 268 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் விபத்து மரணம் 48 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்