கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் அவர்களின் வழிகாட்டுதலின் படி பண்ருட்டி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. முரளி, திரு. செந்தில்குமார் மற்றும் திரு. தேவநாதன் ஆகியோர் பண்ருட்டி நகர சுற்றுலா வாடகை வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வாகன ஓட்டுநர்கள் முறையான ஓட்டுநர் உரிமம், Insurance, Fitness Certificate நடைமுறையில் வைத்திருக்கவும், முறையான சீருடையில் வாகனம் இயக்க அறிவுறுத்தியும், வாகனத்தில் அதிகப்படியான ஆட்களை ஏற்றி சவாரி செல்ல கூடாது எனவும், குடிபோதையில் வாகனம் இயக்க கூடாது என எச்சரிக்கை செய்தும், ஓட்டுனர்கள் நீண்ட தொலைதூர பயணங்களில் செல்ல வேண்டி இருக்கும் பொழுது போதுமான கால இடைவெளியில் வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்து மீண்டும் வாகனம் இயக்க அறிவுரை வழங்கியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்கள்.
















