அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் I.P.S., அவர்கள் உத்தரவின் படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் (19.06.2025) சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுத்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டம் அரியலூர் உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் திரு.R.ரகுபதி மற்றும் அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.அறிவழகன் ஆகியோர் தலைமையிலும், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.