கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பரமேஸ்வர பத்மநாபன் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் பண்ருட்டி போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் திரு. செந்தில்குமார் மற்றும் திரு. தேவநாதன் இருவரும் பண்ருட்டி நகர ஆட்டோ ஓட்டுநர்களை சந்தித்து நகரில் விபத்து ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை ஓட்டுமாறும் மது போதையில் வாகனங்களை இயக்கக் கூடாது எனவும் அதிகமான ஆட்களை வாகனத்தில் ஏற்றி சவாரி செய்ய கூடாது எனவும் போக்குவரத்து இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் அறிவுரை வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
















