தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் வைத்து (22.02.2025) தூத்துக்குடி மாவட்ட த்தில் உள்ள நேரடி சார்பு ஆய்வாளர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்பாக துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு முதலிடம் பிடித்து தென்பாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. ஆரோக்கிய ஜென்ஸி, 2ம் இடம் பிடித்த மணியாச்சி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. முத்துமாலை மற்றும் 3வது இடம் பிடித்த கயத்தாறு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்ட்டி ரவுடி டீம் (Anti Rowdy Team) காவல்துறையினர் குற்ற பட்டியலிடப்பட்ட இடங்களில் குற்றவாளிகளை கண்காணித்தும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரோந்து பணியை மேம்படுத்துமாறு அறிவுரைகள் வழங்கி, ரோந்து பணியின்போது காவல்துறை அதிகாரிகள் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்தி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம் மற்றும் திரு. தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன் இ.கா.ப, பயிற்சி காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வி. மீரா இ.கா.ப மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.