கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் உள்ள தாசரப்பள்ளி கிராமத்தில் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் சோதனை செய்த போது விற்பனை செய்ய வைக்கப்பட்டிருந்த சாராயம் இருந்தது. சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்ய வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 3 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து சாராயம் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து குற்றவாளியுடன் காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.















