திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம், தச்சக்குடி தெருவைச் சேர்ந்த செல்வகுமார் மகன் மது (22). இவர் சமூக வலைதள செயலியான முகநூலில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்னையை தூண்டும் வகையில் காணொலி பதிவு செய்து பரப்பியுள்ளார். இதையறிந்த தேவர்குளம் காவல் உதவி ஆய்வாளர் லூக் அசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சர்ச்சைக்குரிய காணொலியை பதிவிட்ட மதுவை (29.06.2025) அன்று கைது செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்