அரியலூர்: அரியலூர் மாவட்டம், புதுக்கோட்டை பூக்காரத் தெருவில் வசிக்கும் லாசர் என்பவரின் மகன் சிம்சோன்(30/25) என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாவார். இவர் கடந்த (04.05.2025)-ந் தேதி அன்று அதே ஊரைச் சேர்ந்த ஒருவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றதாக திருமானூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்கண்ட குற்றவாளி (05.05.2025)-ந் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குற்றவாளியின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், குற்றவாளி வெளியே வந்தால் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி திருமானூர் காவல் ஆய்வாளர் திரு.குணசேகரன் அவர்கள் கோரியதன் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் இ.கா.ப., அவர்களின் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பொ.இரத்தினசமி, இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்து, அதன் அடிப்படையில் (11.06.2025)-ந் தேதி மேற்படி குற்றவாளி மீது வழங்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ஆணை பிரதியை மத்திய சிறைக்காவல் அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.