திருநெல்வேலி: திருநெல்வேலி சிவந்திப்பட்டி முத்தூர் பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், வெள்ளைத்துரை தலைமையிலான காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சரள் மண் ஏற்றிக் கொண்டிருந்தவர்களை விசாரணை செய்த பொழுது முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த மணிகண்டன்(32). வல்லநாட்டைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் பாலமுருகன்(26). நான்குனேரி வாகைக்குளத்தைச் சேர்ந்த மாசானமுத்து மகன் பொன்ராஜ்(26). ஆகிய மூவரும் அனுமதியின்றி சரள் மண் அள்ளியது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த காவல்துறையினர், மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய 2 டிப்பர் லாரிகள், பொக்லைன் இயந்திரம், 3 யூனிட் சரள் மண் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















