இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையில் (15.11.2025) இராமநாதபுரம் சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி. இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின்போது, ஆயுதப்படை காவலர்கள் பயன்படுத்தும் உடை பொருட்கள், உபகரணங்கள் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து காவல் வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன. பின்னர், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ஆயுதப்படையின் ஆயுத வைப்பறை பராமரிப்பு மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். இந்த நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ், இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி
















