திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேலூர் பேருந்து நிலையம் அருகே மேலூர் அக்னி சிறகுகள் சமூக நல அறக்கட்டளை சார்பில் மது போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவர்களுக்கு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. அறக்கட்டளையின் நிர்வாகிகளான கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேலூர் கெங்கையம்மன் கோயிலில் இருந்து பேருந்து நிலையம் வரை பைந்தமிழ் கால்பந்து அணியின் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தில்லைக்கூத்தன் நாட்டிய பள்ளி வழங்கிய பரதநாட்டியம் அனைவரையும் வரவேற்றது. ஆதிதமிழர் கலைக்குழுவின் பறையாட்டம்,உயிர்களை நேஷனல் சிலம்பம் அகாடமி கலைக்குழுவின் போதையை ஒழித்திடுவோம் தேசத்தை காத்திடுவோம் என்ற தலைப்பில் சிலம்பாட்டமும், ஸ்பார்ட்டன் ஜிம் மாஸ்டர் சார்லஸ் வழங்கிய வளமான உடலும், நலமான உள்ளமும், நிலையான வாழ்வு என்ற தலைப்பில் உடற்கட்டு அழகு காண்பிக்கும் நிகழ்ச்சியும், எல்லாம் ஒரு நிகழ்வு தான் அருள் செழியன் மாஸ்டர் வழங்கும் போதை அழிவின் பாதை எனும் தலைப்பில் நடன அமைப்பு நிகழ்ச்சியும், கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை வழங்கிய போதை ஒரு சாத்தான் எனும் தலைப்பில் நாடகமும், அக்னி சிறகுகள் அறக்கட்டளை வழங்கிய மேலூர் பற்றிய ஒரு காணொளி காட்சி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி சீரும் வழங்கப்பட்டது. அரசுப்பள்ளி மாணவி ஸ்ரேயா ஸ்ரீயின் போதை விழிப்புணர்வு பேச்சு அனைவரையும் கவர்ந்தது. பல்வேறு அரசுத்துறை மற்றும் தனியார் துறையை சார்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டினை அண்ணாதுரை எனும் அலெக்ஸ்,சங்கர் எனும் ரூபன், நாகராஜ் ஜான் உள்ளிட்டோர் செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு