கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது மத்திகிரி பேருந்து நிறுத்தம் அருகில் அவ்வழியாக வந்த இரண்டு வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்கள். இரண்டு வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 4யூனிட் M-Sand , 6யூனிட் ஜல்லி இருந்தது. அனுமதியின்றி M-Sand, ஜல்லி ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து மத்திகிரி காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.















