கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு குந்தமாரணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 4 யூனிட் மண் இருந்தது. அனுமதியின்றி மண் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
















