கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஜூஜூவாடி காவல் சோதனை சாவடி அருகே ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்த போது அவ்வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 8 கிலோ 959 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















