கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது உத்தனப்பள்ளி To ஓசூர் ரோடு பீர்ஜேப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார் எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 1 யூனிட் உடைகற்கள் இருந்தது அனுமதியின்றி உடைகற்கள் ஏற்றி வந்த வாகனத்தை பறிமுதல் செய்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.