திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூா் ஊருடையார்புரம் பகுதியில் தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர், மகேந்திரகுமார் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மந்திரம் மகன் பாலகிருஷ்ணன் (43). சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 27 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் திருநெல்வேலி மாநகரம் பேட்டை நரிக்குறவர் காலனி பகுதியில் மதுவிலக்கு பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், ஜெயசங்கரி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் ஜெயராமனை (39). கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்