கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனபள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தொட்ட மெட்டை கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2 யூனிட் M-Sand இருந்தது. அனுமதியின்றி M-Sand கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.















