கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது மாடறஹள்ளி பிரிவு பாதை அருகே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதியின்றி 3 யூனிட் மணல் இருந்தது, மணல் கடத்திய இரண்டு நபர்களை கைது செய்து மணல் கடத்த பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















