கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது தொடுதேப்பள்ளி ஊருக்கு அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் ஓரம் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டு, ₹25,200/- ரூபாய் பணம், சீட்டு கட்டு மற்றும் மூன்று இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.