கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொத்தகொண்ட பள்ளி கிராமத்தில் உள்ள தைலத்தோப்பில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 16 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹ 8,60,550/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் 4 இருசக்கர வாகனங்கள், 18 செல்போன்கள், ₹230/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருட்கள் மற்றும் ₹3,220/- ரூபாய் மதிப்பிலான வெளிமாநிலம் மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து கைது செய்து நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.