கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது புட்டன தொட்டி கிராமத்தில் உள்ள ஆனந்த் என்பவரது தோட்டத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் சூதாடி கொண்டிருந்த 6 நபர்களில் 3 நபர்கள் தப்பி ஓடி விட்டனர். மீதமிருந்த மற்ற 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டுகட்டுகள் மற்றும் ₹2000/- ரூபாய் பணம், 5 இருசக்கர வாகனம் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்
















