கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாரல்தொட்டி கிராமம் மலை அடிவாரத்தில் அருகே உள்ள புங்கமரத்தடியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த மூன்று நபர்கள் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய மூன்று நபர்களில் இரண்டு நபர்கள் தப்பி ஓடி விட்டதாகவும் ஒரு நபரை கைது செய்து அவரிடமிருந்து ₹ 500/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் நான்கு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து கைது செய்த ஒரு நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.