கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் நேரு நகரில் உள்ள மீனாட்சி லே அவுட்டில் உள்ள பாலாஜி என்பவரின் வீட்டின் உள்ளே மூன்று அறையில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 15 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹ 55,000/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.