கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஓசூர் ராயக்கோட்டை ரோடு அசோக் மில்லர் அருகே போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது வெளிமாநில குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து ₹ 50,000 /- ரூபாய் மதிப்பிலான வெளிமாநில குட்கா பொருட்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















