திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., சட்டவிரோத செயல்களுக்கு ஆயுதங்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு. சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இது போன்ற குற்றவாளிகள் தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றனர். இதை தடுப்பதற்காக அரிவாள்கள் தயார் செய்யும் பட்டறைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பட்டறைகளில் மரங்கள் வெட்ட மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்-உபகரணங்கள் தவிர்த்து, அபாயகரமான அரிவாள் மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என இரும்பு பட்டறை உரிமையாளர்களுக்கு, காவல்துறை மூலம் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேல அரியகுளத்தில், சுடலையாண்டி (72). சோ்மவேல் (60). ராமசுப்பிரமணியன் (25). ஆகியோரது பட்டறையை சோதனை செய்தபோது, தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்ற சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான ஆயுதங்களை தயார் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்