திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் தனியார் ATM-க்கு பணம் நிரப்ப ரூ.29 லட்சத்தை நாகார்ஜுன்(30). என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற போது செம்பட்டி அருகே புதுகோடாங்கிபட்டி டாஸ்மாக் கடை அருகே 3 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றது தொடர்பாக செம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பல் பயன்படுத்திய இருசக்கர வாகன பதிவு எண், தேவதானப்பட்டியை சேர்ந்தது என்ற தகவல் அடிப்படையில் துப்பு துலங்கி தேவதானப்பட்டி சுரேந்தர்(25). முகமது இத்ரீஸ்(21). பிரீத்திவ்(19). மற்றொரு (17). வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா