திருநெல்வேலி : திருநெல்வேலி கங்கைகொண்டான் கலைஞர் காலனியில் வசித்து வரும் நாகராஜ் (47). என்பவரிடம் (22.05.2025) அன்று இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள், அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூபாய் 2000/- பணத்தை மிரட்டி கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது குறித்து, நாகராஜ் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர், வேல்கனி விசாரணை மேற்கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்