திண்டுக்கல்: திண்டுக்கல், நத்தம் சமுத்திராபட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன்(47). இவர் சிறுகுடி செல்லும் சாலை ஊரணிக்கரை பகுதி வீட்டில் தாய் சொர்ணத்துடன் (70). வசித்து வந்தநிலையில் ஜூன் 16- இரவு வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் அழகப்பனின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோவை திறக்க கூறி அதில் நகை, பணம் இல்லாத ஆத்திரத்தில் கத்தியால் அவரின் கழுத்து, கை,கால்களில் சராமரியாக குத்திவிட்டு தப்பினர். இது குறித்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக ஏழு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா