திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, தெப்பக்குளம், முருகன் கோவில் அருகே கடந்த (20.12.2025) அன்று சேரன்மகாதேவியை சேர்ந்த மணிகண்டன் (22). என்பவரை முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் மாயாண்டி என்ற மாயா (46). செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் கவனத்திற்கு வந்ததால், அவரை குண்டர் தடுப்பு சட்ட பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மாயாண்டி என்ற மாயா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (23.01.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்