திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள கீழசெவல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சங்கரசுப்பிரமணியன். விவசாயியான இவரை கடந்த (13-9-2021) ஆம் தேதி ஒரு கும்பல் வடவூர்பட்டி அருகே வாணியங்குளம் பகுதியில் கொலை செய்தது. இது குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து கொத்தன்குளம் பகுதியைச் சேர்ந்த மகாராஜன் என்ற ராஜா, பாண்டி என்ற சியான்பாண்டி, பாறையடியைச் சேர்ந்த சீதாராமன் என்ற பப்பி, முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், அரவிந்த், ராஜகுரு, மாரிமுத்து என்ற முத்து, மாரியப்பன் என்ற சிங்கம், சரவணகுமாா், விக்னேஷ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மகாராஜன், பாண்டி, சீதாராமன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை, தலா ரூ.1000 அபராதம் விதித்தும், மற்ற ஆறு பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்