தூத்துக்குடி: கடந்த (13.10.2025) அன்று தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய கஞ்சா எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான திருநெல்வேலி மாவட்டம் முனஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்வின் தங்கராஜ் மகன் ஜேம்ஸ் செல்லதுரை (25). என்பவரையும், அதே போன்று கடந்த (11.10.2025) அன்று ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி தெற்கு கோவன்காடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜேஷ்குமார் (25). மற்றும் தூத்துக்குடி சேர்வைக்காரன் மடம் பகுதியை சேர்ந்த தெய்வமுத்து மகன் பாலமுகேஷ்(20) ஆகிய 3 குற்றவாளிகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (12.11.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 122 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















