தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சாம்பவர் வடகரை சாவடி தெருவை சேர்ந்த பழனியப்பன் என்பவரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகன் முத்துராமன் (37). என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கின் விசாரணையானது தென்காசி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி திரு.மனோஜ் குமார் அவர்கள் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேற்படி வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த சாம்பவர் வடகரை காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.