தூத்துக்குடி: செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா இரட்டை ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு – இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் மொத்தம் 16 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.