தூத்துக்குடி: கடந்த (06.10.2025) அன்று குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சேர்ந்த அம்மாமுத்து மகன் மூர்த்திராஜா (27). மற்றும் குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துச்செல்வன் (27). என்பவரையும் அதேபோன்று ஆறுமுகநேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்செந்தூர் தலைவன்வடலி பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் சூர்யா (23). ஆகிய 3 குற்றவாளிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் (31.10.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 115 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















