திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை இட்டமொழி பகுதியில் கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற முத்தாரம்மன் கோவில் கொடை விழா சம்பந்தமான முன்விரோதத்தால் இட்டமொழியைசேர்ந்த செந்தில்குமார் (23). என்பவரை அதே பகுதியை சேர்ந்த முத்து குமார் (30). என்பவர் (07.07.2017) அன்று கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இது குறித்து திசையன்விளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கு விசாரணை வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், (27.01.2025)-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் முத்துக்குமாருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ 500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்