கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் காவல் நிலைய பகுதியில் (27.10.2011) ஆம் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஆறு எதிரிகளுக்கு கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹23,000- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
















