திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் சண்முகசுந்தரம் என்ற சுந்தரை(35). மாநகர காவல் துணை ஆணையர், மரு.C.மதன், இ.கா.ப., (மேற்கு). காவல் உதவி ஆணையர், K.அஜுகுமார்,(டவுண் சரகம்). காவல் ஆய்வாளர், M.அருள்பிரகாஷ் (பேட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், முனைவர்.நெ. மணிவண்ணன், இ.கா.ப., ஆணைப்படி (10.01.2026)- அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















