தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கடந்த (06.09.2025) அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான விளாத்திகுளம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த அம்சத்கான் மகன் அப்துல் (22). என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் இன்று (06.10.2025) விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.