திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த முத்து என்பவர் திண்டுக்கல், EVR-சாலையில் சமுதாயக்கூடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திண்டுக்கல், கிருஷ்ணராவ் தெருவை சேர்ந்த குமரேசன் மகன் சிவகணேஷ் சபரி(20). என்பவர் உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சி செய்ததாக முத்து அளித்த புகாரின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா சார்பு ஆய்வாளர் வீரபாண்டி மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சிவகணேஷ் சபரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















