இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய பகுதியில் செய்யது அப்துல்லா என்பவரை கொலை செய்த வழக்கில் முகமது அனாஸ் என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மேலும் இந்நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., அவர்கள் முகமது அனாஸ் என்பவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள்.