கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அர்ஜுன் (23).பெயிண்டர். இவருக்கும் சாகுல்ஹமீது (23). என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாகுல்ஹமீது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அர்ஜுனைக் கடத்தி கொலை செய்து சூளகிரி அருகே புறம்போக்கு நிலத்தில் புதைத்துள்ளனர்.
இது தொடர்பாக ஓசூர் நகர போலீசார் விசாரணை நடத்தியதில் சாகுல்ஹமீது, பவன்பிராஷ், சைபு ஆகிய 3 பேரை கைது செய்து புதைக்கப்பட்ட உடலைத் தோண்டி விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஓசூர் ராம் நகரைச் சேர்நத்த தருண் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்