கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய பகுதியில் (16.12.2016) ஆம் தேதி நிலத்தகராறு சம்பந்தமாக விவசாயியை கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் (28.07.2025) ஆம் தேதி குற்றவாளிக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் + ₹1,000/- ரூபாய் அபராதமும், (தவறினால் ஒரு மாதம் ஜெயில்) தடயங்களை மறைத்ததற்காக இரண்டு வருடம் தண்டனையும் + 1,000/- ரூபாய் (தவறினால் ஒரு மாதம் ஜெயில்) அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை பெற்ற குற்றவாளியை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்