திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி, புதுகிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (30). உமாசெல்வி இருவரும் கணவன் மனைவி ஆவர். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில் முன்பகை காரணமாக, (14.08.2022) அன்று மாரிமுத்துவின் தந்தை சுப்பையாவை உமா செல்வியின் சகோதரர்கள் மற்றும் தந்தை, முத்துகுட்டி (25).சுடலைமணி (26). மாரியப்பன் (51). ஆகியோர் அருவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இக்கொலை வழக்கு விசாரணை தென்காசி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (04.02.2025) அன்று விசாரித்த நீதிமன்றம் முத்துகுட்டி, சுடலைமணி, மாரியப்பன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த பாப்பாக்குடி காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்