திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தூத்துக்குடி மாவட்டம் ஓ .கைலாசபுரத்தை சேர்ந்த ராணி(43). என்பவர் தனது கணவருடன் டீ குடித்துவிட்டு கிளம்பும் போது உடன் வைத்திருந்த கைப்பேசியை காணவில்லை என தெரிய வந்தது. இது குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் ராணி அளித்த புகாரின் பேரில்
காவல் உதவி ஆய்வாளர் சொரிமுத்துபாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கங்கைகொண்டான் வடகரை பகுதி கீழத் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (27). என்பவர் கைப்பேசியை திருடியது தெரியவந்து. அவரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்