தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இன்று (17.06.2025) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாரோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ மாணவிகளிடமும் மற்றும் துளசிபட்டி கிராம பகுதியில் பொதுமக்களிடமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடைச் சட்டம், குழந்தைகள் உதவி எண் 1098, பெண்கள் உதவி எண் 1091 மற்றும் போதைப் பொருள் தடுப்பு, ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் ஆபத்து போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.