திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள ரெங்கசமுத்திரம், நத்தம் காலனியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மகன் முருகன் (35). இவர் அடிதடி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், முருகன் அடிக்கடி அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சண்முகவேல், விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் உத்தரவின்பேரில், முருகன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















