திண்டுக்கல் : திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள கருங்கல் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(43) இவர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வடமதுரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.