திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கொட்டாரக்குறிச்சியை சேர்ந்த சங்கர் கணேஷ்(33). மற்றும் மகாராஜன் (34). ஆகிய இருவரும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி மற்றும் மோசடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வீரவநல்லூர் காவல் ஆய்வாளர், சுஜித் ஆனந்த் கவனத்திற்கு வந்ததால், இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப, வின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (08.05.2025) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்