திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மூவிருந்தாளி, வடக்கு தெருவை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் விஜயராஜ் என்ற விஜயகுமார் (33). என்பவர் கொலை முயற்சி திருட்டு போன்ற பல வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் மானூர் வட்ட காவல் ஆய்வாளர், சந்திரசேகரன் வேண்டுகோளின் படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், விஜயராஜ் என்ற விஜயகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (30.04.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்